நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கஜா புயல் எதிரொலியாக பெய்த சாரல் மழை மற்றும் கடுமையான பனி மூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கஜா புயல் எதிரொலியாக பெய்த சாரல் மழை மற்றும் கடுமையான பனி மூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இங்குள்ள சுற்றுலாத்தலங்களிலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடர்த்தியான மேகமூட்டத்தால் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில், கடும் மேகமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், மேகமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இதனை சுற்றுலாப் பயணிகள் ரசித்து சென்றாலும், இயற்கை காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பனிமூட்டத்துடன் கடும் குளிரும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெம்மை ஆடைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.