இதுவரையில் தமிழக அரசின் செயல்பாடுகளில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே சிறப்பானது : கோவையில் கி. வீரமணி பாராட்டு

கோவை : தமிழக அரசின் இதுவரையிலான செயல்பாடுகளில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதே சிறப்பானதாக இருந்தது என திராவிட கட்சியின் தலைவர் கி.வீரமணி கூறினார்.

கோவை : தமிழக அரசின் இதுவரையிலான செயல்பாடுகளில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதே சிறப்பானதாக இருந்தது என திராவிட கட்சியின் தலைவர் கி.வீரமணி கூறினார். 

கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி பங்கேற்க வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தற்போது நிலவி வரும் மதவாதம், பறிபோய் வரும் மாநில சுயாட்சி உள்ளிட்டவை பற்றி மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்படும். பாலின கொடுமைகள் சாதிய அடிப்படையில் நடைபெறுவது அரசுக்கு மிகப்பெரிய அவமானமாகும். ஆணவ கொலையை தடுக்க காவல்துறையில் இதற்கென்று தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். 

இதுவரையில் தமிழக அரசு நடந்து கொண்டதில் கஜா புயலின் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது சிறப்பாக உள்ளது. பேரிடர் மேலாண்மை வாரியம் இந்த முறை சிறப்பாக தனது பணியை செய்துள்ளது. தமிழக அரசு தனது உரிமைக்காக மத்திய அரசுடன் போராடினால் இன்னமும் பாராட்டலாம், என்றார். 



இதைத் தொடர்ந்து, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக அவர் கூறியதாவது :- சபரிமலை பிரச்சனை என்பது மதவாதிகளால் தூண்டப்படுகிறது. கேரள அரசை வீழ்த்துவதற்கு மதவாதிகள் செய்யும் சதி இது. பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும், பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று கூற மதவாதிகள் யார்..?. மேலும், சபரிமலை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் கட்சி வாக்குக்காக அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது. 

20 தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதை விட உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்துவது தான் முக்கியமானது. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு தோல்விகளை கண்டு வருகிறது. தங்களது தோல்வியை திசைதிருப்பவே ராமர் கோவில் விவகாரத்தை அவ்வப்போது கையில் எடுத்து வருகிறார்கள், என்றார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...