கோவை மாநகர் காவலர்களுக்கான 3 நாள் 'காவலர் நிறைவாழ்வு பயிற்சி' வகுப்பு தொடக்கம்

கோவை : கோவை மாநகரில் உள்ள காவலர்களுக்கு 3 நாள் காவலர் நிறைவாழ்வு பயிற்சி வகுப்பை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


கோவை : கோவை மாநகரில் உள்ள காவலர்களுக்கு 3 நாள் காவலர் நிறைவாழ்வு பயிற்சி வகுப்பை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



பணிச்சுமை மற்றும் மனஅழுத்தம் காரணமாக தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதேபோல, இந்த மன அழுத்தங்களினால் சில போலீசார் தற்கொலையும் செய்து வருகின்றனர். பொதுமக்களின் சேவைக்காக செயல்படும் போலீசார் மன அழுத்தங்களுடன் பணிகளில் ஈடுபடுவது பல நேரங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இதனால், அவர்களின் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது.



இந்த நிலையில், காவலர்களை மனஅழுத்தத்தில் இருந்து மீட்பதற்கான காவலர் நலன் காக்கும் "காவலர் நிறைவாழ்வு பயிற்சி" என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த காவலர் நிறைவாழ்வு திட்டம் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தொடங்கியது. கோவை மாநகர காவல்துறையில் உள்ள காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மனஅழுத்தத்தை கையாள்வது குறித்து 3 நாள் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நடக்கிறது. இதில், முதல் இரண்டு நாள் காவலர்களுக்கும், மூன்றாம் நாள் காவலர்களுடன், அவர்களது குடும்பத்தினருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.



இந்தப் பயிற்சி திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், கோவை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் (சட்டம் - ஒழுங்கு) டாக்டர் எல்.பாலாஜி சரவணன், துணை ஆணையாளர் (குற்றம்) பி.பெருமாள், போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் மற்றும் பல உயர் அதிகாரிகள் காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...