மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் தொடக்கம்

கோவை : தமிழக அரசு சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் தொடங்கின.

கோவை : தமிழக அரசு சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் தொடங்கின.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த முகாமில் திருக்கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் 48 நாட்களுக்கு பங்கேற்கும். முகாமில் யானைகளுக்கு சத்தான உணவு மற்றும் இயற்கையான சூழல், பவானி ஆற்றில் குளியல், மருத்துவ பரிசோதனை என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு யானைகளுக்குப் புத்துணர்வு மற்றும் ஓய்வு அளிக்கப்படும்.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான முகாம் இந்த மாத இறுதியில் நடைபெறும் என தெரிகிறது. அதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முகாம் நடைபெறும் இடத்தில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



யானைகளை கட்டிவைக்க ஏதுவாக தரைகளை சமன் செய்யும் பணிகள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது. மேலும், யானைகள் குளிப்பதற்கு ஏதுவாக கூடுதலான சவர் பாத் அமைக்கும் பணியும், படுக்க வைத்து குளிப்பாட்ட தரைதளம் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. 

மேலும், யானைகளுக்கு உணவு, பாகன்கள் தங்கும் இடம், உணவு, கழிவறை, மின்விளக்கு போன்றவற்றுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கான டெண்டர் நாளை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...