கோவை: பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பனப்பாளையம் செக்போஸ்ட்டில் திருப்பூர் சாலையிலிருந்து பல்லடம் நோக்கிச் சென்ற மொபட் மீது, கரூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பதிமூன்று வயது சிறுமி சம்பவ இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
அப்போது அந்த வழியாக வந்த பல்லடம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் பொதுமக்களுடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டதுடன் காயமடைந்த மூன்று பேரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார்.

இதனிடையே சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் போலீசார் விபத்தில் பலியான சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
இதனிடையே இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்லடம் அருகே கரடிவாவியைச் சேர்ந்த ராமசாமி (65) தனது மனைவி பழனியம்மாள் (60) மற்றும் பேத்திகள் நளினி (13) மற்றும் தாமிரபரணி (8) ஆகியோருடன் கரைப்புதூரில் உள்ள தங்களது மகன் சரவணக்குமார் வீட்டிற்குச் சென்றுவிட்டு, இன்று காலை கரடிவாவிக்குத் திருப்பும்போது விபத்தில் சிக்கிய விபரம் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பனப்பாளையம் செக்போஸ்ட்டில் திருப்பூர் சாலையிலிருந்து பல்லடம் நோக்கிச் சென்ற மொபட் மீது, கரூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பதிமூன்று வயது சிறுமி சம்பவ இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
அப்போது அந்த வழியாக வந்த பல்லடம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் பொதுமக்களுடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டதுடன் காயமடைந்த மூன்று பேரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார்.

இதனிடையே சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் போலீசார் விபத்தில் பலியான சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
இதனிடையே இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்லடம் அருகே கரடிவாவியைச் சேர்ந்த ராமசாமி (65) தனது மனைவி பழனியம்மாள் (60) மற்றும் பேத்திகள் நளினி (13) மற்றும் தாமிரபரணி (8) ஆகியோருடன் கரைப்புதூரில் உள்ள தங்களது மகன் சரவணக்குமார் வீட்டிற்குச் சென்றுவிட்டு, இன்று காலை கரடிவாவிக்குத் திருப்பும்போது விபத்தில் சிக்கிய விபரம் தெரியவந்துள்ளது.