கோவை : போத்தனூரில் ஆன்லைன் மூலமாக அரிசி வர்த்தகம் செய்து ரூ. 8 லட்சம் மோசடி செய்த வர்த்தக நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : போத்தனூரில் ஆன்லைன் மூலமாக அரிசி வர்த்தகம் செய்து ரூ. 8 லட்சம் மோசடி செய்த வர்த்தக நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் அஷ்ரப் (31). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்திடம் இருந்து 20 டன் அரிசி கொள்முதல் செய்துள்ளார். ரூ. 2 லட்சம் ரொக்கமும் மீதமுள்ள ரூ. 8 லட்சத்து 8 ஆயிரத்துக்கு காசோலையும் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அவரது கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.
இதையடுத்து, அரிசி அனுப்பிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளரான போத்தனூரை சேர்ந்த கௌதம் (22), அஷ்ரப்பின் நிறுவனத்திற்கு நேரில் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால், அஷ்ரப் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் அப்துல் சாலிக் (37), ஜான் பாஷா (32) ஆகியோர் கௌதமை மிரட்டியுள்ளனர்.

பின்னர், இந்த மோசடி தொடர்பாக கௌதம், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், அஷ்ரப் உள்பட 3 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் அஷ்ரப் (31). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்திடம் இருந்து 20 டன் அரிசி கொள்முதல் செய்துள்ளார். ரூ. 2 லட்சம் ரொக்கமும் மீதமுள்ள ரூ. 8 லட்சத்து 8 ஆயிரத்துக்கு காசோலையும் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அவரது கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.
இதையடுத்து, அரிசி அனுப்பிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளரான போத்தனூரை சேர்ந்த கௌதம் (22), அஷ்ரப்பின் நிறுவனத்திற்கு நேரில் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால், அஷ்ரப் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் அப்துல் சாலிக் (37), ஜான் பாஷா (32) ஆகியோர் கௌதமை மிரட்டியுள்ளனர்.

பின்னர், இந்த மோசடி தொடர்பாக கௌதம், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், அஷ்ரப் உள்பட 3 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.