கிணத்துக்கடவு வட்டார அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாத அவலம் : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் 75 பள்ளிகளில் பயிலும் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்தார்.


கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் 75 பள்ளிகளில் பயிலும் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்தார்.

கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு விடுமுறைகள் முடிந்து 2-வது கட்ட தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் தமிழக அரசின் இலவசப் பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் இருந்து பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். 

குறிப்பாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில் மட்டும் 75 பள்ளிகளில் சுமார் 5,324 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், 1,088 மாணவர்கள் 5-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். 

"கிணத்துக்கடவு வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 75 பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தில் அரசு மற்றும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது," என சமூக ஆர்வலர் மணி கூறுகின்றார்.

இது தொடர்பாக கடந்த வாரம் வட்டாரக் கல்வி அலுவலர் ஷர்மிளாவிடம் கேட்டபோது, "தர்மபுரி, தமிழ்நாடு பாடப்புத்தகக் கழகத்திடம் இருந்து மாவட்ட கல்வி அலுவலகம் பாடப்புத்தகங்களைப் பெற்றுள்ளது. இனி, பள்ளி வாரியாக விநியோகம் செய்யும் பணிகளுக்காகக் காத்திருக்கிறோம். கிணத்துக்கடவு வட்டாரத்தில் பயிலும் மாணவர்களுக்கு 645 புத்தகங்கள் தேவைப்படுவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் அவர்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," இவ்வாறு கூறியிருந்தார். 

சமூக ஆர்வலர் மணியின் குழந்தையும் கிணத்துக்கடவு அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு மனு ஒன்றை அளித்துள்ளார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 2-வது கட்ட தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கி 40 நாட்களுக்கும் மேலாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், எதிர்வரும் தேர்விற்காக மாணவர்கள் தயாராகாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அரசும் இந்த விவகாரம் மெத்தனமாக இருக்கிறது, என்றார். 

இது குறித்து மாவட்ட தலைமை கல்வி அலுவலரிடம் கேட்ட போது, "கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் சில புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய புத்தகங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஆர்வலர் இன்று செய்தியாளர்களிடம் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது," எனக் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...