நீலகிரி : மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நீர் பனி பொழிவு மற்றும் நவம்பர் 15-ம் தேதி உறை பனி பொழிவு காணப்படும்.
நீலகிரி : மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நீர் பனி பொழிவு மற்றும் நவம்பர் 15-ம் தேதி உறை பனி பொழிவு காணப்படும்.
இந்த காலங்களில் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கும்.

இந்த நீர் பனி பொழிவு மற்றும் உறை பனி சீசனை வரவேற்கும் வகையில் உதகை முழுவதும் உள்ள மலைப்பாதையில் உள்ள வனப்பகுதிகள் முழுவதும் காட்டு டேலியா மலர்கள் நிறைந்து காணப்படும்.
இதை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முழுவதும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.

இந்நிலையில், இந்தாண்டு மேலும் அழகு சேர்க்கும் வகையில் நீலகிரி மலைப்பாதையில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாடா மல்லி மலர்களும் அதை போல சிறு குறிஞ்சி மலர்களும் பூத்துள்ளன.
இதை உதகைக்கு வரும் சுற்றுலா சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

மேலும், உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நீர் பனி பொழிவு காணப்படுவதோடு, ஊதா, நீலம் என பல வகை காட்டு செடிகளில் அறிய வகை மலர்கள் பூத்துள்ளதால் பசுமையாகக் காணப்படுகிறது.