திருப்பூர் : விவசாயிகள் பெயரில் அ.தி.மு.க., பிரமுகர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் : விவசாயிகள் பெயரில் அ.தி.மு.க., பிரமுகர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சம்பந்தபாளையம் கிராமத்தில் ஏற்கனவே சடையபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதற்கு அருகாமையிலேயே பால் சேகர மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர், அரசியல் போட்டி காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் ஆவணங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி புதியதாக பால் கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கோரியுள்ளனர்.
இதனிடையே, இந்த பால் கூட்டுறவு சங்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என கட்சி சார்பற்ற விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை துணைஆணையரிடம் மனு அளித்தனர்.
சம்பந்தபாளையம் கிராமத்தில் ஏற்கனவே சடையபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதற்கு அருகாமையிலேயே பால் சேகர மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர், அரசியல் போட்டி காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் ஆவணங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி புதியதாக பால் கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கோரியுள்ளனர்.
இதனிடையே, இந்த பால் கூட்டுறவு சங்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என கட்சி சார்பற்ற விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை துணைஆணையரிடம் மனு அளித்தனர்.