கோவை விமான நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தின் மூலம் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தின் மூலம் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். 

சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று ஏர் அரேபியாவுக்கு சொந்தமான விமானம் வந்தது. அதில், சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுடான் பகுதியைச் சேர்ந்த ஹபீஸ் அகமது இஷாக் முஸா (38) என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், சட்டவிரோதமாக, உரிய ஆவணங்கள் இன்றி 5 தங்கக் கட்டிகளும், தங்கத்தினால் ஆன பெல்ட் பக்கிளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, 2 செல்போன்களும், லெதர் பெல்ட்டும் கைப்பற்றப்பட்டது. 

761.200 கிராம் எடை கொண்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.24,96,736 என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஹபீஸ் அகமது கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...