வனத்தைப் பாதுகாக்கும் பழங்குடியின மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ''தீபாவளி'

கோவை : வனப் பகுதிகளைப் பாதுகாக்க உதவி செய்து வரும் பழங்குடியினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆனைகட்டி பகுதியில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கோவை : வனப் பகுதிகளைப் பாதுகாக்க உதவி செய்து வரும் பழங்குடியினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆனைகட்டி பகுதியில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. 



தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதியில் கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில், வனப் பகுதிகளைப் பாதுகாக்க உதவி செய்து வரும் பழங்குடியினருக்கு நன்றி தெரிவிக்கும் தீபாவளிப் பண்டிகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பனப்பள்ளி, கொண்டனூர், கொண்டனூர் புதூர், கண்டிவலி, ஜம்புகண்டி, கூட்டுப்புலிக்காடு மற்றும் ஆலமரமேடு போன்ற மலைக்கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர். 



ஆலமரமேடு பகுதியில் இருக்கும் ஐ.எஃப்.எஃப்.சி.ஓ., வளாகத்தில் நேற்று நடந்த இந்தக் கொண்டாட்டத்தின் போது, கோவை ஆயுதம் கலை குழுவினருடன் இணைந்து வயது வித்தியாசமின்றி அனைவரும் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். அதோடு, சிலம்பம், தப்பாட்டம், சுருள்வாள் மற்றும் தீ நடனம் போன்றவையும் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறையின் அதிவிரைவுப் படை வீரர்களும் கலந்துகொண்டனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...