கோவை : அரசு அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, விசாரணைக்கு தேவைபடும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தார்.
கோவை : அரசு அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, விசாரணைக்கு தேவைபடும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருப்பவர் சேனாதிபதி. இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் சோமையம்பாளயம் பகுதியில் நிலம் ஒன்றில் வீட்டுமனைகள் பிரித்து டி.டி.சி.பி. அனுமதிபெற்ற நிலங்கள் எனக் கூறி போலியாக ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்தையும் போலியாக போட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்த தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை கைது செய்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துசாமி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் சேனாதிபதிக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனையடுத்து, ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை கோவை 8-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், சேனாதிபதியை கைது செய்ய போதிய முகாந்திரம் இல்லை எனவும், அதனால் சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் போது காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை நீதிபதி பாலமுருகன் விடுவித்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருப்பவர் சேனாதிபதி. இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் சோமையம்பாளயம் பகுதியில் நிலம் ஒன்றில் வீட்டுமனைகள் பிரித்து டி.டி.சி.பி. அனுமதிபெற்ற நிலங்கள் எனக் கூறி போலியாக ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்தையும் போலியாக போட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்த தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை கைது செய்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துசாமி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் சேனாதிபதிக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனையடுத்து, ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை கோவை 8-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், சேனாதிபதியை கைது செய்ய போதிய முகாந்திரம் இல்லை எனவும், அதனால் சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் போது காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை நீதிபதி பாலமுருகன் விடுவித்தார்.