ரோட்டரி கிளப் சார்பில் கோவை ரயில்நிலையத்தில் பாலூட்டும் அறை திறப்பு

கோவை : ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.


கோவை : ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.



ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கும் விழாவின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் யு. சுப்பாராவ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுனர் ரோட்டேரியன் எ. வி. பதி முன்னிலை வகித்தார். 

இது குறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் தலைவர் ரோட்டேரியன் டாக்டர். பி. கிருஷ்ணானந்தன் கூறும்போது :- மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத பணியை ரோட்டரி சங்கம் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இது 8 அடி அகலம், 8 அடி நீளம் என்ற அளவில் அமைக்கப்பட்ட அறையாகும். இதில், ஒரே நேரத்தில் 4 தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டலாம். இந்த சேவையானது மிக விரையில் கோவையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமைக்கப்படும். இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

மேலும், கோவை ரயில் நிலையங்களின் தூய்மையைப் பாதுகாக்க மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க 20 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் எங்களுடன் சேர்ந்து ரயில் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும். ரோட்டரி கிளப்புகள் சார்பில் நமது பாரத பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் முழு வெற்றியடைய பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இது குறித்து பொதுமக்களிடம் அவ்வப்போது பல விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். மேலும், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கோவை - திருச்சி ரோடு பட்டணத்தில் உள்ள ரோட்டோரியன் ஆனந்தனின் நிறுவனத்தில் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன, இவ்வாறு அவர் கூறினார். 

விழாவில் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் எ. விஜுவின், கோவை ரயில் நிலைய தலைமை வணிக ஆய்வாளர் சிட்டிபாபு, நிலைய இயக்குநர் சதீஷ், ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் செயலாளர் ரோட்டேரியன் சி.ஆர்.வி. ஸ்ரீநாத், சேர்மன் கம்யூனிட்டி சர்வீஸ் ரோட்டேரியன் டாக்டர். அர்சத், ஜி.ஜி.ஆர். ரோட்டேரியன் பி. எஸ். பிரகாஷ் மற்றும் தியாகராஜன், முன்னாள் தலைவர் ரோட்டேரியன் எ. காட்வின் மரிய விசுவாசம், துணை ஆளுநர் ரோட்டேரியன் சி.ஜி. குமார், மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...