கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து பெங்களூருக்கு 27 பேருந்துகளும், மைசூருக்கு 55 பேருந்துகளும் இயக்கப்படும் என கோவையில் உள்ள கர்நாடகப் போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து பெங்களூருக்கு 27 பேருந்துகளும், மைசூருக்கு 55 பேருந்துகளும் இயக்கப்படும் என கோவையில் உள்ள கர்நாடகப் போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளிமாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் அவர்களது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இதனால், ஏற்படும் கூட்ட நெரிலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை - பெங்களூர் இடையே கூடுதலாக 15 பேருந்துகளும், கோவை - மைசூர் இடையே 15 பேருந்துகளும் வரும் திங்கள் முதல் இயக்கப்படுகின்றன. கோவை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து நாட்களிலும் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது குறித்து கோவையில் உள்ள கர்நாடக போக்குவரத்து கழக மேலாளர் ரவி கூறுகையில், "இதற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. மேலும், பேருந்துகளின் எண்ணிக்கை பொதுமக்களின் கூட்டத்தைப் பொருத்து அதிகரிக்கப்படும். முன்பதிவு இல்லாத பேருந்துகளும் இயக்கப்படும்," என்றார்.