உதகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தீபாவளி போனசாக வழங்க இருந்த லஞ்சப் பணம் பறிமுதல்

நீலகிரி : நீலகிரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலக ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் வழங்கப்பட இருந்த லஞ்சப் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலக ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் வழங்கப்பட இருந்த லஞ்சப் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு பெரும் புள்ளிகள் சார்பில் லஞ்சப் பணம் போனசாக வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக, இன்று மாலை உதகை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, கீதா லட்சுமி, ரங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கோபாலகிருஷ்ணன் உட்பட சில ஒப்பந்ததாரர்கள், அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக வழங்க இருந்த லஞ்சப் பணம் ரூ. 2,01,500-ஐ அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர், அவர்களிடம் கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...