சென்னை : தீபாவளி பண்டிகையின் போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தலா ஒருமணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னை : தீபாவளி பண்டிகையின் போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தலா ஒருமணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதியளித்துள்ளது.
மாசுபாட்டை தடுக்கும் வகையில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், வடமாநிலங்களில் இரவு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் கேட்ட தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால், தென் மாநிலங்களுக்கு முக்கிய சலுகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க முடியும். ஆனால், அந்த இரண்டு மணி நேரத்தை தென் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும். அதாவது, காலையில் வெடிப்பதா..?, மாலையில் வெடிப்பதா..?, இரவில் வெடிப்பதா..? என்று முடிவு செய்து கொள்ள முடியும். இரவில் ஒரு மணி நேரம் பகலில் ஒரு மணி நேரம் என்று மாற்றி மாற்றி வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அந்தந்த தென்மாநில அரசுகள் இதற்கான அறிவுரைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறியிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.