கோவை : பாரம்பரியம் மாறாமல் நீலகிரி மலைரயில் நவீனப்படுத்தப்படும் என மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தை ஆய்வு செய்த இந்திய ரயில்வே ஆணைய செயல் இயக்குநர் விகாஸ் ஆர்யா தெரிவித்துள்ளார்.
கோவை : பாரம்பரியம் மாறாமல் நீலகிரி மலைரயில் நவீனப்படுத்தப்படும் என மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தை ஆய்வு செய்த இந்திய ரயில்வே ஆணைய செயல் இயக்குநர் விகாஸ் ஆர்யா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ரயில்நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்த இந்திய ரயில்வே ஆணைய செயல் இயக்குநர் விகாஸ் ஆர்யா, ரயில்நிலையம் மற்றும் மலைரயில் கண்காட்சி அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் உலக பாரம்பரிய சின்னமான நீலகிரி மலைரயிலின் பழமையும், பாரம்பரியமும் மாறாமல் அதனை நவீனப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக இம்மலை ரயிலுக்கென புதிய நீராவி எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை நூற்றாண்டுகள் கடந்த மலைரயில் என்ஜின்களை போலவே உருவாக்கப்பட்டு வருகின்றன. மலைரயிலை நவீனப்படுத்தும் போது, இதன் இயக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். பிற ரயில்களைப் போல மலைரயில் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது குறித்து தற்போது திட்டமில்லை. 3 மணிநேர பயணத்திற்கு தேவையான உணவு பொருட்களை பயணிகளே கொண்டு வரலாம். மேலும், மலைரயில் இடை நிற்கும் ரயில் நிலையங்களில் இந்த வசதி மேம்படுத்தப்படும், என்றார்.
இந்தியாவில் உள்ள மிக பழமையான ரயில்நிலையங்களில் மேட்டுப்பாளையம் ரயில்நிலையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ரயில்நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்த இந்திய ரயில்வே ஆணைய செயல் இயக்குநர் விகாஸ் ஆர்யா, ரயில்நிலையம் மற்றும் மலைரயில் கண்காட்சி அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் உலக பாரம்பரிய சின்னமான நீலகிரி மலைரயிலின் பழமையும், பாரம்பரியமும் மாறாமல் அதனை நவீனப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக இம்மலை ரயிலுக்கென புதிய நீராவி எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை நூற்றாண்டுகள் கடந்த மலைரயில் என்ஜின்களை போலவே உருவாக்கப்பட்டு வருகின்றன. மலைரயிலை நவீனப்படுத்தும் போது, இதன் இயக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். பிற ரயில்களைப் போல மலைரயில் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது குறித்து தற்போது திட்டமில்லை. 3 மணிநேர பயணத்திற்கு தேவையான உணவு பொருட்களை பயணிகளே கொண்டு வரலாம். மேலும், மலைரயில் இடை நிற்கும் ரயில் நிலையங்களில் இந்த வசதி மேம்படுத்தப்படும், என்றார்.
இந்தியாவில் உள்ள மிக பழமையான ரயில்நிலையங்களில் மேட்டுப்பாளையம் ரயில்நிலையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.