கோவையில் மளிகை கடைக்கு தீவைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு தீ வைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை: கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு தீ வைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சிவானந்தா காலனியில் உள்ள காந்திநகர் பகுதியில் அசன் கோயல் என்பவரது மகன் சையத் அலவி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரின் கடைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி சுமார் 11:45 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். 

இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து தீக்கிரையாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் சூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் மூலம் கடைக்கு தீ வைத்தவர் சூர்யா என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பல்வேறு குற்றங்களில் சூர்யாவுக்கு தொடர்பு இருப்பதாலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த உத்தரவு நகல் மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...