55 நாட்களுக்குப் பிறகு சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது

சபரிமலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று மாலை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சபரிமலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று மாலை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநிலமே நிலைகுலைந்து போனது. தற்போது அம்மாநில மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இந்த பேரிடர் காரணமாக கடந்த 55 நாட்களுக்கு முன்பு சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது. இந்த நிலையில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று மாலை திறக்கப்படும் என்று கோவில் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:-

உணவு, தண்ணீர் பிரச்சினை உள்ளதால், தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் ஊர் திரும்பிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார், தொடர்ந்து ஆழி குண்டத்தில் தீ வளர்க்கப்படும்.

இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும், நாளை அதிகாலை 4.00 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும். வரும் 21-ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் படி பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும், தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துவார்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...