நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் தடையாக இருக்கிறது : கோவையில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் பேச்சு

கோவை : நாட்டின் வளர்ச்சிக்கு ஊழலே பெரும் தடையாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125-ம் ஆண்டு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் தெரிவித்தார்.

கோவை : நாட்டின் வளர்ச்சிக்கு ஊழலே பெரும் தடையாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125-ம் ஆண்டு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் கடந்த 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதியன்று நடைபெற்ற சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர், டியர் சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என தனது உரையை பேச தொடங்கினார். அவரது இந்த சொற்பொழிவு இந்திய மக்களின் சுய மதிப்பையும், தன்னம்பிக்கையினையும் புதுப்பித்தது. உலக பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வின் 125 ஆண்டு நினைவு விழா, கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலையாவில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், 125 கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு இடையே நடத்தப்பட்ட மனனம், கட்டுரை, மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.



ஆங்கிலத்தை காட்டிலும் இனிமையான மொழி தமிழ் மொழி என தமிழில் தனது உரையை தொடங்கிய ஆளுநர் கூறியதாவது :- நான் பல ஆண்டுகளாக விழாக்களில் பேசிய போது சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவை குறிப்பிடும் போது டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஆப் அமெரிக்கா என பேச்சை தொடங்கினார் என்றே பேசி வந்தேன். ஒரு முறை வழக்கம் போல் நான் இப்படி ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது தான் ஒருவர் எழுந்து எனது தவறை சுட்டிக்காட்டி, விவேகானந்தர் டியர் சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்றே தனது சிகாகோ சொற்பொழிவை தொடங்கினார் எனக்கூறினார்.



அன்று முதல் என்னை நான் திருத்திக்கொண்டேன். விவேகானந்தரின் ஆன்மீக பாதையில் பயணிப்பவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது ஊழல். பொறுப்பில் உள்ளவர்கள் வீண் ஆடம்பரத்தை வெறுத்து எளிமையாக வாழ விரும்பினால் ஊழல் குறித்த சிந்தனையே வராது அவரிடம் நேர்மை தானாக வந்து சேரும். நேர்மையாக இருக்க விரும்புவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றாலும், இறுதியில் அவரே வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இளைய தலைமுறையினர் விவேகானந்தர், மகாத்மா காந்தியடிகள் வாழ்ந்து காட்டியதை போல தங்களது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும். இவை இரண்டும் உங்களிடம் இருந்தால் வெற்றியும் துணிவும் உங்களை தேடி வரும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...