திருப்பூர்: திருப்பூரில் தெய்வம் கனவில் கூறியதாக, பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பார்சல் ஒன்றை கொடுத்துவிட்டு ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் தெய்வம் கனவில் கூறியதாக, பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பார்சல் ஒன்றை கொடுத்துவிட்டு ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதாவும் பனியன் நிறுவனத்தில் பனியாற்றி வருகிறார். இவர்களுக்கு சக்திவேல் என்ற 16 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை முத்துநகர் பகுதியில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து வீட்டிற்கு சென்ற கண்ணன், நாச்சிமுத்து கொடுக்க கூறியதாக ஒரு பார்சல் ஒன்றை வீட்டில் கொடுத்ததோடு, தனது செருப்பை கழட்டிவிட்டு ஓடினார்.
இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கண்ணன் அங்கு வந்து, தானே அந்த பையை கொடுத்ததாகவும், சுவாமி கனவில் வந்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை அழைத்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கண்ணனை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதாவும் பனியன் நிறுவனத்தில் பனியாற்றி வருகிறார். இவர்களுக்கு சக்திவேல் என்ற 16 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை முத்துநகர் பகுதியில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து வீட்டிற்கு சென்ற கண்ணன், நாச்சிமுத்து கொடுக்க கூறியதாக ஒரு பார்சல் ஒன்றை வீட்டில் கொடுத்ததோடு, தனது செருப்பை கழட்டிவிட்டு ஓடினார்.
இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கண்ணன் அங்கு வந்து, தானே அந்த பையை கொடுத்ததாகவும், சுவாமி கனவில் வந்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை அழைத்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கண்ணனை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.