நாடு முழுவதும் உள்ள பார்மஸி கல்லூரிகளில் மலிவு விலை மருந்தகங்களை திறக்க திட்டம்

நீலகிரி : நாடு முழுவதும் உள்ள 2,000 பார்மஸி கல்லூரிகளில் மலிவு விலை மருந்தகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய பார்மஸி கவுன்ஸிலின் தலைவர் பி. சுரேஷ் தெரிவித்துள்ளார்.


நீலகிரி : நாடு முழுவதும் உள்ள 2,000 பார்மஸி கல்லூரிகளில் மலிவு விலை மருந்தகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய பார்மஸி கவுன்ஸிலின் தலைவர் பி. சுரேஷ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக உதகையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஜன் அவுஷாதி மருந்தகங்களில் தரமான மருந்துகள் உரிய தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு தரசான்றிதழுடன் விற்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு அனைத்து மருந்துகளும் கிடைப்பதை உறுதி செய்யவே இத்திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தியாவில் பார்மஸி துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. மருந்து உற்பத்தி ரூ. 1,20,000 கோடி அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதில், ரூ. 60 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

உலகில் பிறக்கும் அனைத்து குழந்தையும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்புஊசி போடப்படுகிறது. அந்த அளவிற்கு தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் பார்மஸி கவுன்ஸிலின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்ற வகையில் இந்த கவுன்ஸிலின் செயல்பாடுகள் டிஜிட்டல் மையமாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், நாட்டிலுள்ள 2,000 பார்மஸி கல்லூரிகள் தங்களது அங்கீகாரத்தைப் புதுப்பிக்க இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...