முறையற்ற பணியிட மாறுதல்கள் கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

கோவை: முறையற்ற பணியிட மாறுதல்கள் கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: முறையற்ற பணியிட மாறுதல்கள் கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 26-ம் தேதி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் நடப்பு கல்வியாண்டில் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பணியிட மாறுதல்களைக் கைவிட வேண்டும், கழக பொறுப்பாளர்கள் மீது விசாரணையின்றி பணியிட மாறுதலைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை கல்லூரி வாயில் முன்பும் வாயில் முழக்கப் போராட்டம் நடத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலை கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி அரசு இந்த போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்றும், இணை இயக்குநர்கள் நியமனத்தில் பணிமூப்பு பின்பற்றப் படவேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...