கோவையில் மரம் வெட்டப்படுவதை தட்டிக் கேட்ட சமூக ஆர்வலருக்கு மிரட்டல்

கோவை : லட்சுமி மில்ஸ் அருகே மரங்களை வெட்டிய குடியிருப்புவாசியிடம் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : லட்சுமி மில்ஸ் அருகே மரங்களை வெட்டிய குடியிருப்புவாசியிடம் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை - அவினாசி சாலையில் உள்ள லட்சுமி பகுதியில் ஆனந்தாஸ் ஓட்டல் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள குடியிருப்பைச் சேர்ந்த பகுதிவாசி ஒருவர் அங்கிருந்த இரண்டு வேப்ப மரங்களை வெட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சென்ற ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத், மரம் வெட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால், மரம் வெட்டுவது தங்களது சொந்த விருப்பம், எங்களிடம் கேள்வி கேட்க உரிமை இல்லை என அந்த குடியிருப்புவாசி பதிலளித்துள்ளார். 



அப்போது, அங்கிருந்த ஒருசிலர், தங்களை அரசு அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டதுடன், மரம் வெட்டப்படுவது குறித்து வீடியோ எடுத்த சமூக ஆர்வலர் சையத்தின் செல்போனை பறித்துக் கொண்டனர். இதனால், சமூக நலன் தொடர்பான செயல்களுக்கு ஆதரவான சமூக ஆர்வலர்களின் கேள்வி கேட்கும் உரிமைகளையும் அதிகாரிகள் பறித்துக் கொண்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...