கேரள வெள்ள பாதிப்பு எதிரொலி : 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கறிக்கோழி விலை சரிவு

கேரளா: கேரளாவில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கேரளா: கேரளாவில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

தமிழகத்தில் வாராந்தோறும் சுமார் 70 லட்சம் பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து அவற்றை அதிகளவு இறக்குமதி செய்யும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். வாராந்தோறும் சுமார் 39 லட்சம் கோழிகள் இறைச்சிக்காக கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக் கோழிகள் ஏற்றுமதி செய்வது தடைப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் ரூ.220-ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது பாதிக்கு பாதி சரிந்து ரூ.110 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பண்ணை நிலவரப்படி, உயிருடன் கோழி கிலோ ரூ. 50-க்கு விற்கப்பட்டது. 

துண்டிக்கப்பட்டுள்ள சாலை போக்குவரத்து சீர்செய்யப்பட்டால், அடுத்த வாரத்தில் மீண்டும் கோழியின் விலை உயரும் என கோழி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...