கோத்தகிரி அருகே அரசு பேருந்து-மினி லாரி மோதி விபத்து: 25 பேர் காயம்

நீலகிரி: கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் அரசு பேருந்தின் பின் பகுதியில் மினி லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பயணிகள் காயமடைந்தனர்.


நீலகிரி:  கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் அரசு பேருந்தின் பின் பகுதியில் மினி லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பயணிகள் காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் கடசோலையிலிருந்து கோத்தகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தின் பின்னால் மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வார்விக் என்னும் இடத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி, அரசு பேருந்தின் பின்னால் மோதி விபத்திற்குள்ளானது.



இதில், பேருந்தில் பயணம் செய்த 25 கூலித்தொழிலாளிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...