கோவையில் வரிகளை செலுத்தாத திரையரங்கத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு; மாநகராட்சி நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறியதால் வடகோவையில் உள்ள கனகதாரா திரையரங்கத்தின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறியதால் வடகோவையில் உள்ள கனகதாரா திரையரங்கத்தின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.

சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் செய்துவரும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு மண்டலம், 22-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கனகதாரா திரையரங்க நிர்வாகத்தினர் கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரி, குடிநீர் கட்டணம், சொத்து வரி மற்றும் ஆபாரதத் தொகை என மொத்தம் ரூ.25,56,568யை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் அறிவிப்பு அனுப்பப்பட்டு ஒரு மாதம் ஆகியும் திரையரங்கம் சார்பில் பதில் வராததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...