மேட்டுப்பாளையம் நகராட்சியின் ஆணையராக எம். காந்திராஜ் பதவியேற்பு

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சியின் புதிய ஆணையராக எம். காந்திராஜ் இன்று பதிவியேற்றுக் கொண்டார்.

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சியின் புதிய ஆணையராக எம். காந்திராஜ் இன்று பதிவியேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டத்தில் மிகவும் முக்கிய நகராட்சிகளில் ஒன்றான மேட்டுப்பாளையம் நகராட்சிக்கென தனி ஆணையர் நியமிக்கப்படாமல், இங்குள்ள நகராட்சி பொறியாளரே ஆணையர் பணியினை கூடுதலாக கவனித்து வந்தனர். பல ஆண்டு காலமாக இதே நிலை தான் தொடர்கிறது. இந்த நிலையில், பலகட்ட போராட்டத்திற்கு பின்பு, கடந்த வருடம் நியமிக்கப்பட்ட ஆணையரும் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டார். இதனால், 6 மாதத்தில் மீண்டும் ஆணையர் பணி காலியானது. மீண்டும் நகராட்சி பொறியாளரே கூடுதலாகப் பணியினை கவனித்து வந்தார்.

தற்போது, மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டம் பணி ரூ. 91 கோடி செலவில் தொடங்க திட்டமிட்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. இருப்பினும், பணிகள் துவங்கப்படவில்லை. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ஆணையாளர் இல்லாததால், இதுபோன்ற பணிகள் தாமதமாவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு தனி ஆணையர் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் புதிய நகராட்சி ஆணையாளராக எம். காந்திராஜ் இன்று முறைப்படி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர், பொதுமக்களின் குறைகளை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...