தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கோவையில் த.பெ.தி.க., புகார் மனு

கோவை: காவல் துறையை மோசமாக விமர்சித்து, இரு மதத்திற்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: காவல் துறையை மோசமாக விமர்சித்து, இரு மதத்திற்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கோவில் சொத்துக்கள் மீட்பு உண்ணா விரதத்தில் பா.ஜ.க., தமிழக தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பேசினார். அப்போது சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் மறுக்கப்பட்டால் காவி படை காக்கிகளை அடக்கியாளும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகும் எனவும், காக்கிகளுக்கு காவி படை தகுந்த பாடம் நடத்தும் என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

இதனை பா.ஜ.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இப்படி தமிழிசை பேசியது காவல் துறையினருக்கு மிரட்டல், சவால் விடுக்கும் வகையிலும், சிறுபான்மையினரிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் உள்ளது.

எனவே, தமிழிசை சவுந்திரராஜன் மீது இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மாநகர ஆணையாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...