நல்லாசிரியர் விருது பட்டியலில் விதி மீறல் உள்ளதா ? - கலை ஆசிரியர் நலச்சங்கம்

கோவை: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

கோவை: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு வழங்கப்படும் விருது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரண்டு மாதங்களுக்கு முன்னே ஆசிரியர்களுக்கு சுற்று அறிக்கை அனுப்பி விண்ணப்பிக்க சொல்வது வழக்கம். விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதன் பெயரில் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு தமிழக அரசால் நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

இதனிடையே, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் யார் யாருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என்கிற பட்டியல் இன்று வரை வெளியிடப்படாமல் ரகசியம் காப்பதாக தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறுகையில், "பொதுவாக நல்லாசிரியர் விருதில் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களுக்கே விருது வழங்கப்படுகிறது. அதே போல் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் 4,000 பேர் இருக்கும் பட்சத்தில், நல்லாசிரியர் விருது பட்டியலில் ஒருவர் கூட இடம் பெறுவது இல்லை.



அதே போல் ஓவியம், இசை ஆசிரியர் ஒருவர் கூட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம் பெற வாய்ப்பு வழங்குவது இல்லை. மாவட்ட தேர்வு குழு தேர்வு செய்த பட்டியல் அப்படியே மாநில தேர்வு குழு பரிந்துரை பட்டியல் வெளியிடுகிறது.

நாளை நல்லாசிரியர் விருது வழங்கப்படும் நிலையில் இன்று வரை கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் யார்? யார்? விருது வாங்கப் போகிறார்கள் என்கிற பட்டியல் வெளியிடப்படவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லாமல் விருது பட்டியல் ஏன் ரகசியம் காக்க வேண்டும். இதனால் இத்தகைய உயரிய விருது, உரிய ஆசிரியர்களுக்கு போய் சேர்வது இல்லை.

தேசிய நல்லாசிரியர் விருது என்பது மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. ஆனால், நல்லாசிரியர் விருது தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு போய்விட கூடாது.

கடந்த முறை கனவு ஆசிரியர் விருது பட்டியலில் கூட தலைமை ஆசிரியர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறக் கூடாது." என்றார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...