வால்பாறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் பிஷப்

கோவை: வால்பாறை பகுதியில் கடந்த மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கோவை: வால்பாறை பகுதியில் கடந்த மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், ஆறுகளின் நீர் மட்டம் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்ததால், ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கழுத்து அளவிற்கு நின்றது. எனவே, வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

இதனால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உடைமைகளை இழந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நிலச்சரிவு மற்றும் சாலை உடைப்பு ஏற்பட்டும் பலர் பாதிப்படைந்தனர்.

பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், திருச்சியில் இருந்து சி.எஸ்.ஐ., திருச்சி மற்றும் தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வால்பாறை சி.எஸ்.ஐ., ஆலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.



இதில், கம்பளி, 25 கிலோ அரிசி, உள்ளாடைகள், மேலாடைகள், உள்ளிட்ட நிவாரண பொருட்கள் 130 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. விடுபட்ட குடும்பங்களுக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...