கோவை: வால்பாறை பகுதியில் கடந்த மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கோவை: வால்பாறை பகுதியில் கடந்த மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், ஆறுகளின் நீர் மட்டம் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்ததால், ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கழுத்து அளவிற்கு நின்றது. எனவே, வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
இதனால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உடைமைகளை இழந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நிலச்சரிவு மற்றும் சாலை உடைப்பு ஏற்பட்டும் பலர் பாதிப்படைந்தனர்.
பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், திருச்சியில் இருந்து சி.எஸ்.ஐ., திருச்சி மற்றும் தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வால்பாறை சி.எஸ்.ஐ., ஆலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.

இதில், கம்பளி, 25 கிலோ அரிசி, உள்ளாடைகள், மேலாடைகள், உள்ளிட்ட நிவாரண பொருட்கள் 130 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. விடுபட்ட குடும்பங்களுக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆறுகளின் நீர் மட்டம் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்ததால், ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கழுத்து அளவிற்கு நின்றது. எனவே, வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
இதனால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உடைமைகளை இழந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நிலச்சரிவு மற்றும் சாலை உடைப்பு ஏற்பட்டும் பலர் பாதிப்படைந்தனர்.
பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், திருச்சியில் இருந்து சி.எஸ்.ஐ., திருச்சி மற்றும் தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வால்பாறை சி.எஸ்.ஐ., ஆலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.

இதில், கம்பளி, 25 கிலோ அரிசி, உள்ளாடைகள், மேலாடைகள், உள்ளிட்ட நிவாரண பொருட்கள் 130 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. விடுபட்ட குடும்பங்களுக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.