கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 230 அடியார்கள் பயிற்சி பெற்றனர். சைவத்திரு குமரலிங்கம் தலைமையில் பன்னிரு திருமுறை, சமய தீக்கை மற்றும் சடங்கு முறைகள் பற்றிய விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழக பன்னிரு திருமுறை ஆய்வுமையத்தின் வாயிலாக மே 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாள்களில் தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. கோவை மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் செயலாளர் சைவத்திரு ப. குமரலிங்கம் தலைமையில் இப்பயிற்சி வழங்கப்பட்டது.



பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr இராச. வசந்தகுமார் 'மேன்மை கொள் சைவ நீதி விளங்குக!' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். "திருமுறைகளை உள்ளன்புடன் ஓதுவதே உயிர் உய்வதற்கான பயிற்சியாக அமையும். குருநாதரின் அருளுபதேசமும், தன்னலத்தை மறந்து அடியார்களுக்குத் தொண்டு செய்வதும் சிவத்தைச் சார்கின்ற பக்திநெறி" என்பதை தமது உரையில் வலியுறுத்தினார்.



அறிஞர்களால் தமிழ்நெறி வழிபாட்டின் சிறப்பு, பன்னிரு திருமுறை வரலாறு, மெய்கண்ட சாத்திரங்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன. அருள் குருநாதர் சைவத்திரு ஒளியரசு அடியார்களுக்கு சமய தீக்கை செய்வித்தார். சைவ அனுட்டான செயல்முறை விளக்கமும், திருமுறைகளை ஓதி வாழ்வியல் சடங்குகளை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளும் அடியார்களுக்கு வழங்கப்பட்டன.

நிறைவு விழாவில் சைவத்திரு பொறியாளர் முத்துசாமி தமிழ் நெறி வழிபாட்டின் சிறப்பினை விளக்கி, அடியார்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பயிற்சி வகுப்பில் சிறந்த பங்களிப்புக்காக இலண்டனிலிருந்து வந்த அடியார்கள் சைவத்திரு காமராஜ் மற்றும் சைவத்திரு பாலமுரளி கிருஷ்ணா ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.

மூன்று நாள் பயிற்சி வகுப்பின் வாயிலாக 230 அடியார்கள் தமிழ் வழிபாட்டு நெறிமுறையை முழுமையாக அறிந்து பயன்பெற்றனர். இப்பயிற்சி வகுப்பு தமிழ் வழிபாட்டு முறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...