ஆக்கிரமிக்கப்பட்ட வழித்தடத்தை மீட்டு தரக்கோரி பள்ளி மாணவன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: குனியமுத்தூர் பிள்ளையார்புரம் அருகில் பன்னாரி அம்மன் நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கோவை: குனியமுத்தூர் பிள்ளையார்புரம் அருகில் பன்னாரி அம்மன் நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் வீட்டிற்குச் செல்லும் மின் இணைப்பு வழிப்பாதையை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகக் கடந்த 2010-ல் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாகவும் தற்போது மீண்டும் அந்த இடத்தில் அதிகாரிகளின் உத்தரவு பெற்று ஒப்புதலோடு வீடு கட்டி வருவதாகவும் கூறி, தங்களுக்கு இடையூறு செய்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.

மேலும், கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியரிடம் இது குறித்த மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, மைல்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் நாகேந்திரனின் மகன் நவநீதகிருஷ்ணன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்தார்.

பள்ளிக்குச் செல்லாமல் இங்கு வந்துள்ளாயே? என்று அங்கிருந்த போலீசார் கேட்டதற்கு, "எனது பெற்றோர் இருவருக்கும் விடுமுறை கிடைக்க பெற முடியாத காரணத்தால், கடந்த மூன்று வாரங்களாக மனு அளிக்க வந்த செல்கிறேன்." என்றார்.

தொடர்ந்து அந்த மாணவன் ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...