தொடர்ந்து 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதைப் பெற்றது பி.எஸ்.ஜி.,

கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானம், தொடர்ந்து 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதைப் பெற்றது.

கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானம், தொடர்ந்து 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதைப் பெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கோவை மாவட்ட அளவில் நடத்தப்படும் பெரும்பாலான போட்டிகள் பி.எஸ்-ஜி., மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த மைதானம், பராமரிப்பு, தோற்றம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கி வருகிறது. இதனால், கடந்த 6 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதை பி.எஸ்-ஜி., கல்வி நிறுவனமே பெற்றுள்ளது.

இந்த நிலையில், 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதும் பி.எஸ்.ஜி., நிர்வாகத்திற்கே கிடைத்துள்ளது. இந்த விருதை பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் டி. பழனிசாமிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் கே.எஸ்., விஸ்வநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், கோவை மாவட்ட கிரிக்கெட் வாரியத் தலைவர் டி. லட்சுமிநாராயணசாமி, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் உதவி செயலாளர் எஸ். மார்ட்டின் ராஜ் ஆகியோர் இருந்தனர். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...