கோவை மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை: கோவை மாவட்டத்தின் பத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார்.

கோவை: கோவை மாவட்டத்தின் பத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார்.



வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியிலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட அனைத்து அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் பின்வருமாறு:-

மேட்டுப்பாளையம்

ஆண்கள்: 1,33,168

பெண்கள்: 1,39,070 

மூன்றாம் பாலினத்தவர்: 27

மொத்தம் 2,72,265 வாக்காளர்கள்.

சூலூர்

ஆண்கள்: 1,41,564

பெண்கள்: 1,45,053 

மூன்றாம் பாலினத்தவர்:19

மொத்தம்: 2,86,629

கவுண்டம்பாளையம்

ஆண்கள்: 2,08,432 

பெண்கள்: 2,08,132 

மூன்றாம் பாலினத்தவர்: 69

மொத்தம்: 4,16,633

கோவை வடக்கு

ஆண்கள்: 1,56,875

பெண்கள்: 1,54,269

மூன்றாம் பாலினத்தவர்:27

மொத்தம்: 3,11,171

தொண்டாமுத்தூர்

ஆண்கள்: 151143 

பெண்கள்: 151969

மூன்றாம் பாலினத்தவர்: 55

மொத்தம்:3,03,167

கோவை தெற்கு

ஆண்கள்: 1,20,749 

பெண்கள்: 1,20,685 

மூன்றாம் பாலினத்தவர்: 14

மொத்தம்: 2,41,448

சிங்காநல்லூர்

ஆண்கள்: 1,50,382

பெண்கள்: 1,51,417 

மூன்றாம் பாலினத்தவர்: 25

மொத்தம்: 3,01,824 

கிணத்துக்கடவு

ஆண்கள்: 1,44,106

பெண்கள்: 1,47,149

மூன்றாம் பாலினத்தவர்:31

மொத்தம்: 2,91,286

பொள்ளாச்சி

ஆண்கள்: 1,03,613

பெண்கள்: 1,09,980

மூன்றாம் பாலினத்தவர்: 14

மொத்தம்: 2,13,607

வால்பாறை

ஆண்கள்: 94,971

பெண்கள்: 1,00,494

மூன்றாம் பாலினத்தவர்:14

மொத்தம்: 1,95,479

பத்து சட்டமன்ற தொகுதிகளில் பதினான்கு லட்சத்து ஐயாயிரத்து மூன்று ஆண் வாக்காளர்களும், பதினான்கு லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து இருநூற்றி பதினெட்டு வாக்காளர்களும், இருநூற்றி என்பத்து எட்டு மூன்றாம் பாலின வாக்காளர் என கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதியில் இருபத்து எட்டு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து ஐநூற்று ஒன்பது வாக்காளர்களின் பட்டியல் வெளியிடபட்டது.



இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "பெயர் விடுபட்டவர்கள் சேர்ப்பது, நீக்கல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் ஞாயிறு தோறும் நடத்தப்படும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் பூத் ஏஜன்ட ஒருவர் திருத்தம் செய்ய பத்து விண்ணப்பங்களும் அதிகபட்சமாக முப்பது படிவங்கள் வரை அளிக்கலாம்." என்றார்.

இதன் பின்னர் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாகவும் இறந்தவர்களின் பெயர் விடுவிக்கபடவில்லை எனவும் சிலரின் பெயர்கள் மீண்டும், மீண்டும் இடம் பெற்று இருப்பதால் அதை நீக்ககோரி நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...