கோவை அரசு மருத்துவமனையில் கேன்சர் வார்டு புதுப்பிக்கப்பட்டதன் தொடக்க விழா

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் அமைப்பின் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கேன்சர் வார்டு புதுப்பிக்கப்பட்டதன் தொடக்க விழா நடைபெற்றது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் அமைப்பின் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கேன்சர் வார்டு புதுப்பிக்கப்பட்டதன் தொடக்க விழா நடைபெற்றது.



கோவை அரசு மருத்துவமனையில் 4 மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கேன்சர் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. அதேபோல, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் முக்கியமான மூன்று சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதனால், இந்த கேன்சர் வார்டிற்கு மட்டும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், இந்த கேன்சர் வார்டில் போதுமான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்கள் இல்லாத நிலை இருந்தது. 



இந்த நிலையில், ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் ஜெயின் அமைப்பினர் கேன்சர் வார்டுக்கு தேவையான 40-க்கும் மேற்பட்ட விசிறிகள், 50-க்கும் மேற்பட்ட கட்டில் போன்ற உபகரணங்களை வழங்கியுள்ளனர். அதோடு, அந்த வார்டை வண்ணம் பூசி புதுப்பொலிவு படுத்தியுள்ளனர். 

இன்றைய நிகழ்ச்சியில், கேன்சர் வார்டை ஜெயின் பக்தி மண்டல் அமைப்பினர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தலைமையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கேன்சர் வார்டின் முதன்மை மருத்துவர் சுரேஷ் வெங்கடாசலம், மருத்துவர் ராகவேந்திரா ஜெயின் அமைப்பின் மத குருக்கள் மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...