கோவை: கோவையில் கூலி தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவையில் கூலி தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் கலிக்கநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் அதேபகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான ரேவதி பந்தல்நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால், அவருடன் பணிபுரிந்தவர்களிடம் உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, மணிகண்டன் குடித்து விட்டு போதையில் கிடப்பதாகவும், பந்தலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர்.
உடனே நிகழ்விடத்திற்கு சென்று பார்த்த போது, தலையில் காயத்துடன் மணிகண்டன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது முதலாளி வேலுசாமி உள்ளிட்டோர் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்திருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனிடையே, வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ஆனால், தொண்டாமுத்தூர் போலீசார் வேலுசாமி தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மணிகண்டனின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
இளைஞரின் மர்ம மரணம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கலிக்கநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் அதேபகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான ரேவதி பந்தல்நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால், அவருடன் பணிபுரிந்தவர்களிடம் உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, மணிகண்டன் குடித்து விட்டு போதையில் கிடப்பதாகவும், பந்தலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர்.
உடனே நிகழ்விடத்திற்கு சென்று பார்த்த போது, தலையில் காயத்துடன் மணிகண்டன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது முதலாளி வேலுசாமி உள்ளிட்டோர் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்திருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனிடையே, வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ஆனால், தொண்டாமுத்தூர் போலீசார் வேலுசாமி தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மணிகண்டனின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
இளைஞரின் மர்ம மரணம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.