கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை மக்கள் பாதுகாப்பிற்காக இடமாற்றம் செய்யவோ, முகாம்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை மக்கள் பாதுகாப்பிற்காக இடமாற்றம் செய்யவோ, முகாம்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பெரியதடாகம் அருகே மலையடிவார வனப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் யானைகள் நடமாட்டம் இன்று கண்காணிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆளில்லா விமானம் மூலம் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதையடுத்து, கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மாவட்டத்தில் மனித வனவிலங்கு மோதல் அதிகமாக உள்ளது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் வனவிலங்குகள் நடமாட்டம், வனப்பகுதிகளை கண்காணிக்க முடியும். ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து விரட்ட முயற்சிக்க உள்ளோம்," என்றார்.
மேலும், இந்த சோதனை வெற்றி பெற்றால் தொடர்ந்து ட்ரோன் பயன்படுத்தப்படும் எனவும் தமிழகத்தில் முதல் முறையாக ட்ரோன் கோவை வனப்பகுதியில் தான் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை மக்கள் பாதுகாப்பிற்காக இடமாற்றம் செய்யவோ, முகாம்களுக்கோ கொண்டு செல்ல அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.