இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் : தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணியவேண்டும் என போக்குவரத்துக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

அதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் இந்தாண்டு ஜூலை வரை 38,491 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதில் 15,601 விபத்துக்கள் இருசக்கர வாகனங்களால் நிகழ்ந்துள்ளன. அதில் 7,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 2,476 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

இந்த உத்தரவை மீறி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும், இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...