ஊதிய நிலுவையால் அவதியுறும் வேட்டைத்தடுப்பு காவலர்கள்

கோவை: மூன்று மாத ஊதிய நிலுவையால் கோவை மாவட்ட வனத்துறையில் பணிபுரியும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அவதியுற்று வருகின்றனர்.

கோவை: மூன்று மாத ஊதிய நிலுவையால் கோவை மாவட்ட வனத்துறையில் பணிபுரியும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அவதியுற்று வருகின்றனர். 

 

கோவையில் 130 பேர் வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. 

மாவட்ட நிர்வாகத்திற்கு பணம் தற்போது வந்த போதிலும், அவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பது, இரவு ரோந்து போன்ற பணிகளில் ஈடுபடும் இவர்களுக்கு முன்னதாக ரூ.8,000 ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவர்கள் ஊதியம் வழங்குவதில் அரசு தொய்வு காட்டி வருகிறது.

பொதுவாக இந்த பிரச்சனை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழும் என்றும், ஆனால், தற்போது செப்டம்பர் மாதமே இந்த பிரச்சனை தலைதூக்கியுள்ளதாகவும், விரைவில் பிரச்சனை சரி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...