முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க முடியாது - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் கேரளாவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் கேரளாவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்கக்கோரி இடுக்கி பகுதியை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) விசாரித்தது. அப்போது, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 138 அடியாகக் குறைக்க முடியுமா? என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியது. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நிலவரம், தண்ணீர் திறப்பு, இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தர துணைக் கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தது.

இன்று நடைபெற்ற விசாரணையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதியம் இரண்டு மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் அதற்கான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. 

அறிக்கையின் படி, முல்லைப் பெரியாறு அணை திடமாக உள்ளதாகவும், அதனால், கேரளாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...