எங்கே போறீங்க...?, மனு கொடுக்க கூட்டமாக வந்தவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க கூட்டம் கூட்டமாக வந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க கூட்டம் கூட்டமாக வந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருபவர்களில் சிலர் தாங்கள் அளித்த மனு மீது நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல், அதிகாரிகள் தொல்லை அளிப்பதாகக் கூறி மண்ணெண்ணெய், பெட்ரோல் ஆகியவற்றை கேனில் கொண்டு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட முயல்வது வழக்கமாகி விட்டது. 



இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளான திங்கட்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனையும் மீறி சிலர் வளாகத்தில் வெளியே தீக்குளிக்க முயலும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்களின் அனைத்து உடமைகளும், தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மனு அளிக்க வருபவர்களின் உடமைகளும், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் அடையாள அட்டையும் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

மனு கொடுக்க திரளாக வருபவர்கள் சிலர் வளாகத்தின் உள்ளே கோஷங்கள் எழுப்புவது, கூட்டம் கூட்டமாக நிற்பதால் மேலும் பலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது கூட்டமாக மனு அளிக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருவர் அல்லது மூவர் மட்டுமே மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், இன்று மனு அளிக்க கும்பலாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், விதிகளை எடுத்துக் கூறிய பிறகு, ஒருசிலர் மட்டுமே உள்ளே மனு அளிக்கச் சென்ற நிலையில், மற்றவர்கள் முனுமுனுத்தபடியே வெளியில் காத்திருந்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...