எங்கே போறீங்க...?, மனு கொடுக்க கூட்டமாக வந்தவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க கூட்டம் கூட்டமாக வந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க கூட்டம் கூட்டமாக வந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருபவர்களில் சிலர் தாங்கள் அளித்த மனு மீது நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல், அதிகாரிகள் தொல்லை அளிப்பதாகக் கூறி மண்ணெண்ணெய், பெட்ரோல் ஆகியவற்றை கேனில் கொண்டு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட முயல்வது வழக்கமாகி விட்டது. 



இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளான திங்கட்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனையும் மீறி சிலர் வளாகத்தில் வெளியே தீக்குளிக்க முயலும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்களின் அனைத்து உடமைகளும், தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மனு அளிக்க வருபவர்களின் உடமைகளும், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் அடையாள அட்டையும் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

மனு கொடுக்க திரளாக வருபவர்கள் சிலர் வளாகத்தின் உள்ளே கோஷங்கள் எழுப்புவது, கூட்டம் கூட்டமாக நிற்பதால் மேலும் பலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது கூட்டமாக மனு அளிக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருவர் அல்லது மூவர் மட்டுமே மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், இன்று மனு அளிக்க கும்பலாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், விதிகளை எடுத்துக் கூறிய பிறகு, ஒருசிலர் மட்டுமே உள்ளே மனு அளிக்கச் சென்ற நிலையில், மற்றவர்கள் முனுமுனுத்தபடியே வெளியில் காத்திருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...