கோவையில் குடிபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் கைது ; தவறை ஒப்புக் கொண்டு வீடியோ வெளியீடு

கோவை: காந்திபுரம் ஆம்னி பேருந்துநிலையம் அருகே போக்குவரத்து காவலர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், தனது தவறை ஒப்புக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கோவை: காந்திபுரம் ஆம்னி பேருந்துநிலையம் அருகே போக்குவரத்து காவலர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், தனது தவறை ஒப்புக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 



வடவள்ளி விஜயாநகரைச் சேர்ந்த ஜெகதீசனின் மகன் சுதர்சன் (28). இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, போலீசார் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது, சுதர்சன் குடிபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதத்தை செலுத்திவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால், குடிபோதையில் இருந்த அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பொது இடத்தில் வைத்து போலீசாரை தரக்குறைவாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இதனால், இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரிச்சர்டு, சட்டம், ஒழுங்கு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர், வந்த இரத்தினபுரி போலீசார் குடிபோதையில் இருந்த சுதர்சனை கைது செய்து, அவர் மீது அரசு அலுவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி செல்லுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 



இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள இளைஞர் சுதர்சன் "தான் மது போதையில் காவல்துறையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்கள் கைதட்டியதால் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளார்". அதேபோல, அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...