நீலகிரி : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் உதகையில் இன்று அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் உதகையில் இன்று அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ்., இன்பதுரை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இன்பதுரை பேசியதாவது :- ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சட்டமன்றம் திகழ்கிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பல்வேறு அரசு துறைகளின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 69 கேள்விகள் விவாதிக்கப்பட்டது.
அதில், 31 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்குழுக்கள் அதிகாரமிக்க குழுக்களில் ஒன்று. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அறிவிக்கப்படும் உறுதிமொழிகள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு அவை அறிக்கையாகக் கொடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு அளிக்கப்படும்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், திட்டங்களும் எந்த நிலையில் உள்ளது. நிலுவையில் உள்ள திட்டங்கள், மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள், வளர்ச்சிப்பணிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறும், அரசு அறிவிக்கும் மக்களுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் .எந்தவித தொய்வுமின்றி அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும், என்றார்.
உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ்., இன்பதுரை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இன்பதுரை பேசியதாவது :- ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சட்டமன்றம் திகழ்கிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பல்வேறு அரசு துறைகளின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 69 கேள்விகள் விவாதிக்கப்பட்டது.
அதில், 31 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்குழுக்கள் அதிகாரமிக்க குழுக்களில் ஒன்று. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அறிவிக்கப்படும் உறுதிமொழிகள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு அவை அறிக்கையாகக் கொடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு அளிக்கப்படும்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், திட்டங்களும் எந்த நிலையில் உள்ளது. நிலுவையில் உள்ள திட்டங்கள், மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள், வளர்ச்சிப்பணிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறும், அரசு அறிவிக்கும் மக்களுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் .எந்தவித தொய்வுமின்றி அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும், என்றார்.