உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும், நல்ல உடல்நலம் பெற்ற பிறகு கருணாநிதியே நன்றி கூறுவார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும், நல்ல உடல்நலம் பெற்ற பிறகு கருணாநிதியே நன்றி கூறுவார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவ முழுநேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதியின் உடல் நலம் குறித்த விசாரித்த, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் ஜெயச்சூரி, சி.பி.ஐ.யின் டி.ராஜா உள்ளிட்டவர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதிக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில், பூரண நலம் பெற்று, அவரே அனைவருக்கும் நன்றி சொல்வார், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவ முழுநேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதியின் உடல் நலம் குறித்த விசாரித்த, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் ஜெயச்சூரி, சி.பி.ஐ.யின் டி.ராஜா உள்ளிட்டவர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதிக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில், பூரண நலம் பெற்று, அவரே அனைவருக்கும் நன்றி சொல்வார், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.