லாரிகள் ஸ்டிரைக்கால் உதகையில் கேரட் வரத்து குறைவு : ஒரு கிலோ ரூ. 60 ஆக உயர்வு

நீலகிரி: லாரிகளின் தொடர் வேலைநிறுத்தத்தின் காரணமாக வரத்து குறைவால், உதகையில் ஒரு கிலோ கேரட்டின் விலை 60 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி: லாரிகளின் தொடர் வேலைநிறுத்தத்தின் காரணமாக வரத்து குறைவால், உதகையில் ஒரு கிலோ கேரட்டின் விலை 60 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் விளையும் கேரட்டுக்கு மேட்டுப்பாளையம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மவுசு அதிகம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும், உதகை மார்க்கெட்டுக்கு 5 டன் அளவுக்கு கேரட் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. 



கடந்த ஒரு வாரமாக தொடரும் லாரிகளின் வேலைநிறுத்தத்தால் தினமும் ஒரு டன் அளவுக்கே கேரட் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த வேலைநிறுத்தம் 8-வது நாளாக நீடிப்பதால், அறுவடைக்கு தயாரான கேரட்டை சந்தைக்கு அனுப்புவதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

கடந்த இரண்டு நாட்களாக உதகை மார்க்கெட் காய்கறி ஏலத்தில் ஒரு கிலோ கேரட் ரூ. 30 முதல் ரூ. 35 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ அதிகபட்சம் ரூ. 60 வரை விற்கப்படுகிறது. உதகை சுற்றுவட்டார பகுதிகளான கேத்தி பாலாடா, எம்.பாலாடா, கோத்தகிரி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அரசு பேருந்துகளுக்கு, அதற்குண்டான வாடகையை முன்கூட்டியே செலுத்தி மேட்டுப்பாளையம், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு கேரட் மூட்டைகளை எடுத்து செல்கின்றனர்.



இது குறித்து உதகை நகராட்சி மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ''லாரிகள் வேலைநிறுத்தத்தால் உதகை மார்க்கெட்டுக்கு தற்போது, ஒரு டன் அளவுக்கு கேரட் விற்பனைக்கு வருகிறது. 35 கிலோ கேரட் அடங்கிய ஒரு மூட்டை, ரூ. 1,000-க்கு விற்கப்படுகிறது. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. லாரி ஸ்டிரைக் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் மலை காய்கறிகளின் விலை சற்றுக் குறையும்,'' என்றார்.



Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...