கோவை: கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனமரத்தூர் அருகே உள்ள செல்வாம்பதி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது, பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக குளம் முழுவதும் நிறைந்துள்ளது. இந்நிலையில், குளத்தின் ஓரத்தில் தலை, கைகள் மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் கிடப்பதாக செல்வபுரம் போலிசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் நீரில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல, கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிற உடல் பாகங்கள் சாக்கு மூட்டையில் குளத்தின் மற்றொரு பகுதியில் கண்டெடுத்தனர். உடலின் பாகங்களை வைத்துப் பார்க்கும் போது, கொலையான பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்..? யார் அவரை கொலை செய்தது..? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.