கோவையில் ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்புவதில் ரூ.22 லட்சம் கையாடல்: ஊழியர்கள் இருவர் கைது

கோவை: கோவையில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்பும் தொகையில் ரூ. 22 லட்சம் வரை திருடிய 2 ஊழியர்களை ராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவையில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்பும் தொகையில் ரூ. 22 லட்சம் வரை திருடிய 2 ஊழியர்களை ராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் செக்யூர் வேல்யூ பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலமாக கோவையில் உள்ள சுமார் 250 ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஏ.டி.எம்., இயந்திரங்களில் கடந்த ஜூன் 3 முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் நிரப்பப்பட்ட பணத்தில் ரூ. 22 லட்சம் குறைந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் எம்.ஜெகதீஷ் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்., மையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அந்த நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றும் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சாஜூதீன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்கிற தாஸ், அக்பர் அலி ஆகியோர் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. மூவரும் அந்த ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பிவிட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு, தனியாக இருசக்கர வாகனங்களில் மீண்டும் வந்து ஏ.டி.எம்., இயந்திரத்தைப் பழுது பார்ப்பது போல் நடித்து பணத்தை திருடியுள்ளனர்.

இதையடுத்து, சாஜூதீன், ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அக்பர் அலியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் ஏற்கனவே இதுபோன்ற கையாடல்கள் நடந்துள்ள சூழலில் மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது அந்த நிறுவனத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...